Press "Enter" to skip to content

IND vs ENG கில், ஜெய்ஸ்வால் சதம்: இந்திய இளம்படை இங்கிலாந்தில் முதல் நாளே புதிய சாதனை – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில்லும், ஜெய்ஸ்வாலும்

கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரின் அபார சதம், ரிஷப் பந்தின் அரைசதம் ஆகியவற்றால் இளம் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை மிரட்டலாகத் தொடங்கியுள்ளது.

ஹெடிங்லியில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது.

ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழக்கவே, கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்ததே நடுவரிசை வீரர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது.

தமிழக வீரர் சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

Source link