Television
oi-Hemavandhana
சென்னை: இசையமைப்பாளர் அனிருத், சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகளும், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனை சமீபகாலமாக காதலிப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றன. ஆனால், இது உண்மையா? கிசுகிசுவா என்று இப்போதுவரை தெரியவில்லை.
தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் அனிருத். ஒய் திஸ் கொல வெறி பாடல் உலகப்புகழ்பெற்றதாக மாறிவிட்டது.. இளம் இசையமைப்பாளர்களில் அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கும் பிடித்துப்போகவும், தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.

புகழின் உச்சி
இறுதியில், விஜய், அஜித், கமல் துவங்கி ரஜினி படங்களுக்கும் அனிருத் இசையமைத்து, புகழின் உச்சியையும் எட்டிவிட்டார்.
இந்நிலையில், Metro Mail என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், “காவ்யா மாறன், அனிருத் காதலிப்பதாக செய்திகள் 3 நாட்களாக கசிந்து வருகின்றன.. ஆனால், இதுவரை இதற்கு மறுப்போ, ஆதரவோ இரு தரப்பிலும் தெரிவிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை நடப்பதாக மற்றொரு தகவல் கசிந்து வருகிறது.
காவ்யா மாறனை பொறுத்தவரை, இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரிகளில் அவரும் ஒருவர். 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அவரிடம் சொத்துஉள்ளது..
சிறந்த நிர்வாகி
சன் ரைசர்ஸ் கிரிக்கெட் கிளப் தலைவராக உள்ளார்.. சன் டிவி குழுமத்தின் மேனேஜிங் டைரக்டரும் இவரேதான். சன் பிக்சர்ஸ், & சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனின் ஒரே மகள்தான் காவ்யா,
அனிருத்தை பொறுத்தவரை, புகழும், பணமும் நிறைந்தவர்.. சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமான சொந்தக்காரர். ரஜினி மனைவியின் தம்பி மகன்தான் அனிருத்..
மிராக்கிள் சம்பவம்
இவர் இசையமைப்பாளரானதே ஒரு மிராக்கிள் எனலாம்.. அனிருத்தை இசையமைப்பாளராக்கிய பெருமை தனுஷையே சாரும்.. அனிருத் எப்போதுமே விளையாட்டு பிள்ளை. ஜாலியாகவே இருப்பார்.
அனிருத் குடும்பமே மிகப்பெரிய இடம்.. தமிழ் சினிமாவின் பிதாமகன் கே.சுப்பிரமணியம் என்பவரின் மகன் எஸ்வி ரமணன்.. இவரது பேரன்தான் (மகளின் மகன்) அனிருத். சன் பிக்சர்ஸுடன் முதலில் தொடர்பில் இருந்தவர் ரஜினிகாந்த்தான்.. மேலும், குடும்பத்துக்கு பெரியவர் என்பதால், இந்த விவகாரத்தை அவர் பேசிவருவதாகவும் தகவல் வெளியாகிவருகிறது.
கிசுகிசுவாக இருக்குமோ?
அனிருத் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.. அனிருத் 34 வயது, காவ்யாவுக்கு 32 வயதாகிறது.. எனவே, இருவருக்கும் பொருத்தமாகவே இருக்கும். ஆனால், இன்னமும் இது உறுதியாகாமல் உள்ளது.. இதுவரை மறுப்பும் வரவில்லை… இது உண்மையாகலாம், அல்லது கிசுகிசுவாகவும் போகலாம்.. எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்
இதனிடையே, சோஷியல் மீடியாவில் இந்த தகவல் குறித்து பல்வேறு கமெண்ட்களை இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.. குறிப்பாக, இருவரின் காதலுக்கும் இருவர் வீட்டிலும் தடை சொல்லமாட்டார்கள், இந்த தகவல் உண்மையானால், சிறந்த ஜோடிதான் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.